Saturday, June 9, 2018

ஸ்ரீ மந்த்ர ராஜ பத ஸ்தோத்ரம் (Tamil)

🐎ஸ்ரீ மந்த்ர ராஜ பத ஸ்தோத்ரம்🐎


1.விசாலமான திருக்கண்களுடன், பக்தர்களைக் கடாக்ஷித்துக் கொண்டு,
அவர்களின் விரோதிகளை நடுநடுங்கச் செய்துகொண்டு , உக்ர ரூபமாக
விளங்கும் ஸ்ரீ ந்ருஸிம்ஹனை நமஸ்கரிக்கிறேன்

2. பகவானுடைய ஸ்ருஷ்டியில் அடங்கிய ஒருவராலும் ,சாகா வரம்பெற்ற
திதியின் பிள்ளையான ஹிரண்யகசிபுவை, தன்னுடைய நகங்களின் நுனியாலேயே
ஸம்ஹரித்த நிகரற்ற வீரனை நமஸ்கரிக்கிறேன்

3. பாதாள லோகத்தில் திருவடிகள்; தேவ லோகத்தில் கிரீடம் ;எட்டுத் திக்குகளிலும்
புஜங்கள்; இப்படி விச்வ ரூபமெடுத்த ஸ்ரீ மகாவிஷ்ணுவான ஸ்ரீ ந்ருஸிம்ஹனை
நமஸ்கரிக்கிறேன்

4.ஸுர்யன், சந்த்ரன் ,நக்ஷத்ரங்கள், அக்னி —இவைகளுக்கெல்லாம் ”ஜ்யோதிஸ் ” என்பதை
யார் அனுக்ரஹித்தாரோ ,அந்த ஜ்வலிக்கும் ஜ்யோதியான பரமாத்ம ஸ்வரூபமான
ஸர்வேச்வரனை நமஸ்கரிக்கிறேன்

5. இந்த்ரியங்கள் உதவி இல்லாமலேயே, ப்ரத்யக்ஷத்தாலே எல்லாவற்றையும்
எக்காலத்திலும் எல்லா இடங்களிலும் அறிபவனான ”ஸர்வதோமுகன் ” ஆகிய
ஜகத்துக்கெல்லாம் காரணமான பகவானை நமஸ்கரிக்கிறேன்

6. பக்தர்களைக் காக்கவும் , அவர்களின் விரோதிகள் அஞ்சவும், விரோதிகளை அப்போதே
அழிப்பவன் என்பதாக மனுஷ்ய சரீரத்துடன்,பயங்கர சிம்ஹ முகத்துடன், பிடரிக் கேசங்களுடன்,
கோரைப் பற்களுடன் ,தானே ஒரு அவதாரத்தைத் தேர்ந்தெடுத்து, பக்தர்களை அனுக்ரஹிக்க
அவதாரம் செய்த ஸ்ரீ ந்ருஸிம்ஹனை நமஸ்கரிக்கிறேன்

7. எந்தப் பகவானின் திருநாமத்தை ஸ்மரித்த மாத்திரத்திலேயே பூதங்கள், வேதாளங்கள்
ராக்ஷஸர்கள் என்கிற வெளிப்புறப் பகைவர்களும், வியாதி போன்ற உட்புற விரோதிகளும்
இருக்குமிடம் தெரியாமல் அழிவார்களோ, அந்தப் பகவானான ,பயங்கரமான ஸ்ரீ ந்ருஸிம்ஹனை
நமஸ்கரிக்கிறேன்

8. உலகில் உள்ளோர் யாரை ஆச்ரயித்து, சகல க்ஷேமங்களையும் அடைகிறார்களோ
அப்படி க்ஷேமத்தை அருள்வதால், ”பத்ரை ” என்ற பெயருள்ள ஸ்ரீ மஹாலக்ஷ்மி
எந்த பகவானை ஆச்ரயித்து இருக்கிறாளோ, அப்படிப்பட்ட ”பத்ர ”என்கிற சப்தத்துக்கு
அர்த்தமாக இருக்கிற பகவானை நமஸ்கரிக்கிறேன் நமஸ்கரிக்கிறேன்

9. பகவானுடைய பக்தர்களை, யமன் நெருங்கமாட்டான் என்றாலும், இதை உணராத
யமன் ,சாமான்யர்களை நெருங்குவதுபோல , பக்தர்களின் மரண சமயத்தில்
நேரே போனாலும், அவனையும் காம, க்ரோத முதலான சத்ருக் கூட்டங்களையும்
களைந்து அருளுகிற யமனுக்கும் யமனான நமஸ்கரிக்கிறேன் நமஸ்கரிக்கிறேன்ஸ்ரீ ந்ருஸிம்ஹனை நமஸ்கரிக்கிறேன்

10. எந்தப் பகவானிடம் சரணாகத சமர்ப்பணத்தைச் செய்து, சகல துக்கங்களும்
அழிந்து, சகல புருஷார்த்தங்களையும் பெறுவேனோ , அந்த ஸ்ரீ ந்ருஸிம்ஹனை
சரணம் அடைகிறேன்

11. சேதனர்கள் எல்லாரும் , பகவானுக்குத் தாஸர்கள்.–ஹே–ந்ருஸிம்ஹா —
அடியேனும் உனக்குத் தாஸன் என்கிற சேஷ—சேஷி ஞான பூர்வமாக
உம்மைச் சரணமாக அடைகிறேன்

12. இப்படி, இந்த மந்த்ர ராஜ பதங்களின் உண்மையான அர்த்தங்கள் ஈச்வரனால்
மிகவும் கருணையுடன் உரைக்கப்பட்டது. இதை, காலையிலும், மத்யான்ன
வேளையிலும் ,சாயங்காலத்திலும் சொல்பவர்கள், ஸத்வித்யை , பக்தி ,ஆயுள்,
ஸம்பத்து , ஞானம் –இவற்றைப் பெற்று விளங்குவர்

இந்த மந்த்ரராஜ பத ஸ்தோத்ரத்தைத் தினமும் 11 தடவை சொல்லுங்கள்

தினமும் மூன்று வேளையும் ஒரு தடவையாவது சொல்லுங்கள்.
 வியாதிகள் ,பீடைகள் ,பூதங்கள், பிசாசங்கள் ,
தொந்தரவுகள் தொலையும்; விரோதிகள் மறைவர்
கடன் தொல்லை
நீங்கும்;ஸம்பத்துகள் பெருகும்;

No comments:

Post a Comment

 அபூர்வ ஸ்லோகம் ராமன் பட்டாபிஷேகத் திருநாளில் அவ்விருவரையும் போற்றி அனுமன் பாடிய ஸ்தோத்திரத் தொகுப்பு இது.  இந்த ஸ்லோகங்களை முடிந்தபோதெல்லாம...