Sunday, February 18, 2018

காணும் இடமெல்லாம் வேங்கடம்...


காணும் இடமெல்லாம் வேங்கடம்...

வேங்கடம் சென்றடைந்தேன்;
வேங்குழலோடு அவன் நின்றான்!
எங்கெல்லாம் காணப்புக்கினும்−
அங்கெல்லாம், ஆயனாய், அவன் சிரித்தான்!

பாவைக்கு அவன், கண்ணனாய்
தெரிந்தானே!
பார்வையில் தான், மாறுபாடோ?
பரிதவித்து நான் இருக்க−ஒரு
புரிதலுடன், அவன் சிரித்தான்!

காதலிலே விழுந்தார்க்கு−
காண்பதெல்லாம் ஓர் உருவம்;
கன்னி நான் விழுந்ததுவோ,
கண்ணன் எனும் அதி மதுரம்!

மீண்டு வர ஆசையில்லை;
மோகக் கடல் மூழ்கி விட்டேன்!
மாதவனை என் மனச்சிறையில்−
மயக்கத்தொடு, ஒளித்து விட்டேன்!

என்னை நானும் இழந்ததனால்,
எங்கும் அவனாய், காட்சித் தந்தான்;
கண்ணின் தவறு ஏதும் இல்லை−
கண்ணன் என்னில் கலந்து விட்டான்!

No comments:

Post a Comment

 அபூர்வ ஸ்லோகம் ராமன் பட்டாபிஷேகத் திருநாளில் அவ்விருவரையும் போற்றி அனுமன் பாடிய ஸ்தோத்திரத் தொகுப்பு இது.  இந்த ஸ்லோகங்களை முடிந்தபோதெல்லாம...