Friday, January 26, 2018

அழகான பழனிமலை ஆண்டவா

#அழகான #பழனிமலை #ஆண்டவா - #உன்னை
அனுதினமும் பாட வந்தேன் வேலவா
வள்ளியம்மையின் நாதனே வா வடிவேலனே...

முத்தைத்தரு பத்தித் திருநகை

#மனதை மயக்கும் #குரலிசையில் #திருப்புகழின் முதல் பாடல்
-
🍀🍀🍀🍀🍀 #மூலநூல் 🍀🍀🍀🍀🍀
----- ----- ----- ----- ----- ----- ----- ----- -----
🍀#முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர ...... எனவோதும்🍀
.
🍀#முக்கட்பர மற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித் திருவரும்
முப்பத்துமு வர்க்கத் தமரரும் ...... அடிபேணப்🍀
.
🍀#பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் ...... இரவாகப்🍀
.
🍀#பத்தற்கிர தத்தைக் கடவிய
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ...... ஒருநாளே🍀
.
🍀#தித்தித்தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
திக்கொட்கந டிக்கக் கழுகொடு ...... கழுதாடத்🍀
.
🍀#திக்குப்பரி அட்டப் பயிரவர்
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக ...... எனவோதக்🍀
.
🍀#கொத்துப்பறை கொட்டக் களமிசை
குக்குக்குகு குக்குக் குகுகுகு
குத்திப்புதை புக்குப் பிடியென ...... முதுகூகை🍀
.
🍀#கொட்புற்றெழ நட்பற் றவுணரை
வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
குத்துப்பட ஒத்துப் பொரவல ...... பெருமாளே.🍀
----- ----- ----- ----- ----- ----- ----- ----- -----
----- ----- ----- ----- ----- ----- ----- ----- -----

 🍀🍀🍀🍀🍀 #சொற்பிரிவு 🍀🍀🍀🍀🍀
----- ----- ----- ----- ----- ----- ----- ----- -----
🍀முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கு இறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர ...... எனவோதும்🍀
.
🍀முக்கட்பரமற்கு சுருதியின்
முற்பட்டது கற்பித்து இருவரும்
முப்பத்துமுவர்க்கத்து அமரரும் ...... அடிபேண🍀
.
🍀பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் ...... இரவாக🍀
.
🍀பத்தற்கு இரதத்தைக் கடவிய
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ...... ஒருநாளே🍀
.
🍀தித்தித்தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
திக்கொட்க நடிக்க கழுகொடு ...... கழுதாட🍀
.
🍀திக்குப்பரி அட்டப் பயிரவர்
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவுரிக்குத் த்ரிகடக ...... எனவோத🍀
.
🍀கொத்துப்பறை கொட்ட களமிசை
குக்குக்குகு குக்குக் குகுகுகு
குத்திப்புதை புக்குப் பிடியென ...... முதுகூகை🍀
.
🍀கொட்புற்றெழ நட்பற்ற அவுணரை
வெட்டிப்பலியிட்டுக் குலகிரி
குத்துப்பட ஒத்துப் பொரவல ...... பெருமாளே🍀
-----
#பொருளுரை: வெண்முத்தை நிகர்த்த, அழகான பல்வரிசையும் இளநகையும் அமைந்த தேவயானை *தேவியின் தலைவனே, சக்திவேல் ஆயுதத்தை ஏந்தும் சரவணபவக் கடவுளே, மோக்ஷ வீட்டுக்கு ஒப்பற்ற ஒரு விதையாக விளங்கும் ஞான குருவே, என்று துதிக்கும் முக்கண்ணர் பரமசிவனார்க்கு வேதங்களுக்கு முதன்மையான ஓம் என்னும் மந்திரத்தை உபதேசித்து, (மும்மூர்த்திகளில் எஞ்சியுள்ள) பிரம்மா, திருமால் ஆகிய இருவரும், முப்பத்து முக்கோடி தேவர்களும் அடி பணிய நின்றவனே.!
-
ராவணனுடைய பத்துத் தலைகளும் சிதறி விழுமாறு அம்பை விட்டு, ஒப்பற்ற மந்தர மலையான மத்தைக் கொண்டு பாற்கடலைக் கடைந்து, ஒரு பகற்பொழுதை வட்டமான சக்ராயுதத்தால் இரவு ஆக்கி, நண்பனாகிய அர்ச்சுனனுக்கு, தேர்ப்பாகனாக வந்து தேரினைச் செலுத்திய பசுமையான நீலமேகவண்ணன் திருமால் பாராட்டும் பரம்பொருளே.! பரிவோடு என்னைக் காத்தருளும் நாள் ஒன்றும் உண்டோ? (இப்பாடலின் பிற்பகுதி முருகன் அசுரர்களுடன் செய்த போரினை விரிவாக வருணிக்கிறது).
-
தித்தித்தெய என்ற தாளத்துக்கு ஒத்து, சிலம்புகள் அணிந்த நாட்டியப் பாதங்களை வைத்து காளிதேவி திசைகளில் எல்லாம் சுழன்று தாண்டவம் செய்யவும், கழுகுகளோடு பேய்கள் சேர்ந்து ஆடவும், எட்டுத் திக்குகளிலும் உலகங்களைத் தாங்குகின்ற அஷ்ட பைரவர்கள் ** இந்த அழகிய கூத்துக்கு ஏற்ப "தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு த்ரிகடக" என்ற தாள ஓசையைக் கூறவும், கூட்டமாகப் பற்பல பறை வாத்தியங்களை அதே தாளத்தில் முழக்கவும், போர்க்களத்தில் கிழக் கோட்டான்கள் "குக்குக்குகு குக்குக் குகுகுகு" என்ற ஓசையோடு "குத்திப் புதை, புகுந்து பிடி" என்றெல்லாம் குழறி வட்டமாகச் சுழன்று மேலே எழவும், சினேக எண்ணம் தவிர்த்து விரோத மனப்பான்மையே கொண்ட அசுரர்களை கொன்று பலி கொடுத்து, அசுரர் குல மலை கிரெளஞ்சகிரி தூளாக, தர்ம மார்க்கத்துக்குப் பொருந்த, போர்செய்யவல்ல பெருமாளே.
-
#குறிப்பு: முருகன் அருணகிரிநாதருக்கு அடி எடுத்துக் கொடுக்கப் பாடிய பாட்டு இது.
-
*தேவயானை கிரியாசக்தி என்பதால், கர்மயோகத்தை முதலில் அனுஷ்டிக்க அவளைக் குறிப்பிட்டார்.
-
**அஷ்ட பைரவர்கள்: அசிதாங்கன், காபாலி, சண்டன், உருரு, குரோதன், சங்காரன், பீடணன், உன்மத்தன்.
-
#சொற்பிரிவு : ஸ்ரீ தில்லை #இளந்தென்றல்
-
🍀வெற்றிவேல் இறைவனுக்கு அரோகரா!🍀
🍀இன்பமே சூழ்க ... நல்லோர்கள் வாழ்க!🍀
-
🍀தென்னாடுடைய சிவனே போற்றி!🍀
🍀எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!🍀🍀
-
|| ----------- 🍀திருச்சிற்றம்பலம்🍀 ----------- ||

சரவண பொய்கையில் நீராடி

#சரவண பொய்கையில் நீராடி
துணை தந்தருள் என்றேன் முருகனிடம்
இரு கரம் நீட்டி வரம் கேட்டேன்
அந்த மன்னவன் இன்னருள் மலர் தந்தான்.🌷🌷🌷
-
#அவனிடம் சொன்னேன் என் அஞ்சுதலை
அந்த அண்ணலே தந்துவைத்தான் ஆறுதலை
இவ்விடம் இவர்தந்த இன்பநிலை – கண்டு
என்னிடம் நான் கண்டேன் மாறுதலை.🌷🌷🌷

Wednesday, January 17, 2018

ஸ்ரீரங்கமஹத்வம்



#ஸ்ரீரங்கமஹத்வம்
-
சொல்லும் சுடலும் உலகமே சொல்லும், அல்லும் பகலும் அணி #திருவரங்கம் என்ன, #நல்லோர் என்று சொல்லும் பெரியவர் திருவடியே சேர்ந்தேன் நான், திருவடியில்
-
ஏழு மதிள் அரங்கத்தம்மான், மச்சோடு மாளிகை மதிள் அரங்கருக்கு,
அத்தர், சித்தர், பக்தர் வாழும், அந்த நீல அரங்கர், ஏல நீல அரங்கர், தேனார் திருவரங்கம், தேனே #திருவரங்கம்,
-
மண்டலத்தை மதிள் சூழ்ந்த ரங்கம் ஆங்காரம் கெய்யாத, அமுதென்ன தென்னரங்கம், ஹரி ஹரி பெரிய கோவில், அணி திருவரங்கம் கோயில், சொல்லுவார் சொல்லும் கோயில், தூய்மதி உறையாத கோயில், மெல்லியார் உறையும் கோவில், வேந்தரடி பணியும் கோயில், அல்லியார் போற்றும் கோயில், ஆண்டாள் அரவணைமேல் அமரும் கோயில், காதத்தே மணி ஓசை கேட்கும் கோயில்,
-
கேட்டதே இரண்டு செவியும் களிக்கும் கோயில், தூரத்தே திருச்சின்னம் தோற்றும் கோயில், வேதத்தால் பெரிய கோயில், விபீஷணர் வணங்கும் கோயில், ஆதி பெருமாள் என்று அனைவருக்கும் பெரிய கோயில் தானே!
-
ஹரி, ஹரி பெரிய கோயில். அம்புஜதத்தோன் அயோத்தி மன்னருக்கு அளித்த கோவில், தோராத தனி வீரன் தொழுத கோயில், துணையாம் விபீஷணற்கு துணையான கோயில், சேராத பயனெல்லாம் சேர்க்கும் கோயில்,
-
செழுமறையின் முதலெழுத்தை சேர்ந்த கோயில், தீராத வினையெல்லாம் தீர்க்கும் கோயில், திருவரங்கம் பெரிய கோயிலிதுதானே! ப்ரம்மாவும் பெறும் தவத்தால் பெற்ற கோயில், பெற்று வைத்து பிள்ளையவர் பெராத கோயில், அயன் வந்து அறுபதாயிரம் பேரோடு அர்ச்சித்த கோயில், பலவினைகள் தீர்த்த கோயில், பரிதாபம் தீர்த்த கோயில்,

திருவரங்கம் பெரிய கோயில் என திகழும் கோயிலிதுதானே!

ஸப்த ப்ராகாரமும், சந்நிதியும் கண்டேன்.

ஸர்வேஸ்வரன் திருவடிகளை சாஷ்டாங்கமாக சேவிக்க கண்டேன்.

இருபுறமும் காவேரி இசைந்துவர கண்டேன்.

திருமஞ்சன காவேரி சேவிக்கவே கண்டேன்.

ஆயனார் கோயில் அடி மதிலை கண்டேன். திருகோயில் ஆயனார் திருவழகை கண்டேன். அடையவளைஞ்சான் அடிமதிலை கண்டேன். ஆண்டாள் சந்நதி அதிசயம் கண்டேன். தேர் கண்டேன்.

சித்திரை வீதி கண்டேன். உத்தர வீதி கண்டேன். நாடு கண்டேன். நகரம் கண்டேன்.

நாலுகால் மண்டபத்தில் திருவந்திப்பு காப்பு அழகை கண்டேன். ஆனையேத்தி மண்டபமும், ஆண்டாளுடைய சேவை அழகையும், அரங்கனுடைய சேவை அழகையும் கண்டேன்.

தொண்டரடிபொடி ஆழ்வாரை சேரவே சேவித்தேன்.

கூரத்தாழ்வாரை கூடவே சேவித்தேன். நாதமுனி ஆழ்வாரை நன்றாகவே சேவித்தேன். ஆளவந்தாரை அனுதினமும் சேவித்தேன். சூடிக்கொடுத்த ஆண்டாள் திருவழகை சேவித்தேன்.

பெரிய ஆழ்வாரை பிரியாமல் சேவித்தேன். கற்கருடக்கம்பத்தை கண்குளிரசேவித்தேன். திருப்பானார் ஆழ்வார் திருவழகை சேவித்தேன். சக்கரத்தாழ்வாரை சரணம் என்று சேவித்தேன். உக்ர நரஸிம் ஹரை உகந்து சேவித்தேன். கோதண்ட ராமரை கூடவே சேவித்தேன். குலசேகர ஆழ்வாரை கூடவே சேவித்தேன். சீதா பிராட்டியார் திருவழகை சேவித்தேன்.

பிள்ளைலோகாச்சாரியாரை பிரியாமல் சேவித்தேன். பார்த்தசாரதியை பணிந்து நான் சேவித்தேன். பாஷ்யகாரரை பணிந்து நான் சேவித்தேன். திருகச்சி நம்பியின் திருவழகை சேவித்தேன்.

நம்மாழ்வாரை நன்றாகவே சேவித்தேன். மதுரகவி ஆழ்வாரை வணங்கி நான் சேவித்தேன்.திருமங்கை ஆழ்வார் திருவழகை சேவித்தேன். கொட்டார நாச்சியாரை கூடவே நான் சேவித்தேன். மேல பட்டாபிராமரை அடி பணிந்து நான் சேவித்தேன். பொய்கை முனி, பூதத்தாழ்வர், பேயாழ்வார் பிரியாமலே சேவித்தேன்.

தீர்த்தங்கரை வாசுதேவர் திருவழகை சேவித்தேன். தந்வந்திரியை கூடவே சேவித்தேன். ஸ்ரீ ரெங்கநாச்சியார், ஸ்ரீ பூமாதேவி, ஸ்ரீ நீளாதேவி, பெரிய பிராட்டியாரை பிரியாமல் சேவித்தேன்.

தசாவதாரரின் திருவழகை சேவித்தேன். திருமங்கை மன்னன் திருவழகை சேவித்தேன். தூப்புல் ஆசாரியர் திருவடியை அடி பணிந்து சேவித்தேன். ஹயக்ரீவர் வந்நிதியை அடி பணிந்து சேவித்தேன். மேட்டழகிய சிங்கரை முன்பாக சேவித்தேன். கண்ணன் திருவடிகளை கண் குளிர சேவித்தேன்.

வாசுதேவ பெருமாளை வணங்கி சேவித்தேன். ஐந்து குழி மூணுவாசல் அதிசயமும் கண்டேன். புன்னாக விருக்ஷத்தின் கீழ் வேதவ்யாசரையும், வேணபடியும் சேவித்தேன். கோதண்டராமரை கூடவே சேவித்தேன்.

சீதாபிராட்டியார் திருவழகை சேவித்தேன். பரமபத நாதரை பக்தியுடன் நான் சேவித்தேன். அலங்கார ராமரை அழகாக சேவித்தேன்.காட்டழகிய சிங்கரை கண்குளிர சேவித்தேன்.லக்ஷ்மிதேவியை நன்றாக சேவித்தேன். திருமழிசை ஆழ்வாரை சேவித்தேன்.

கருடாழ்வாரை கிட்ட நின்று சேவித்தேன். ஆழ்வார் அனைவரையும் அடி பணிந்து சேவித்தேன். அஞ்சனாதேவியின் புத்திரரையும் அடி பணிந்து சேவித்தேன்.

சீனிவாசன் சந்நதியில் பெருமாளை நன்றாக சேவித்தேன். பூவராஹ பெருமாள் பெருமையெல்லாம சேவித்தேன். கமலவல்லி தாயாரை கண் குளிர சேவித்தேன். விரஜா நதியை வேணபடி சேவித்தேன். பரம பதவாசலை பக்தியுடன் சேவித்தேன்.

திருநாரயணபுரம் செல்லைபிள்ளையையும் சேவித்தேன். மடப்பிள்ளை நாச்சியாரை மகிழ்ந்து நான் சேவித்தேன்.

பெரிய பெருமாள் திருவடிகளே சரணம். பொற்குடகம்பத்தை பொருந்தி நான் சேவித்தான். வெங்கல வாசற்படியை வேணும்படி சேவித்தேன்.

கருகூல நாச்சியரை கண்குளிர சேவித்தேன். விமானசேவையை வேணுபடி சேவித்தேன். செங்கமல நாச்சியாரின் திருவழகை சேவித்தேன். துலுக்க பிராட்டியாரை சேரவே சேவித்தேன். சேரவல்லி தாயாரை சேரவே சேவித்தேன். கிளி மண்டபத்தை கிட்ட வந்து சேவித்தேன். சேனை முதலியாரை சேரவே சேவித்தேன்.பரவாசுதேவரை பக்தியுடன் சேவித்தேன். கண்ணன் திருவடியை கண்டு சேவித்தேன்.

ஸ்ரீனிவாசன் திருவுருவத்தை கண்டு நான் சேவித்தேன். அர்ஜுனமண்டபத்தை அழகாகவே சேவித்தேன். சந்தன மண்டபத்தை சதுராகவே சேவித்தேன்.ஜய,விஜயாள் இருபுறமும் சென்று நான் சேவித்தேன். 108-பெருமாள் திருவடிகளே சரணம். பெரிய பெருமாளை பிரியாமல் சேவித்தேன். கஸ்தூரி ரங்கனாரை கண்குளிர சேவித்தேன். அண்டை நாச்சியாரை அழகாக சேவித்தேன்.

பக்கத்து நாச்சியாரைபாங்காக சேவித்தேன். சின்ன பெருமாள் செல்வரை சேவித்தேன். திருவரங்கமாளிகையாரை சென்று நான் சேவித்தேன். பாம்பின்மேல் பள்ளிகொண்டிருக்கும் பரிமள ரங்கரை சேவித்தேன்.கருமுகிலார் அரவவணையின் மேல் கண் வளர கண்டேன். திரு கண்டேன். பொன்மேனி கண்டேன். திருமதிலும் மணி மரமும் கண்டேன்.

திருவடிமேல் வளரும் சிலம்பையும் கண்டேன். பீதாம்பரமும், பிராட்டி திருமார்பில், மார்கண்ட பூணலும், மதிநிறைந்த ஆபரணமும், கார்முகிலார் வண்ணனை கண்டாயோ நெஞ்சமே, கஸ்தூரி ரெங்கனை கண்டாயோ நெஞ்சமே, அஞ்சனை வண்ணனை அடிபணிந்து கண்டீரோ, பெருமாள் மஹத்துவததையும், வைரகடுக்கனும், பெருமாள் பிராட்டியார் அழகன்னோ! பார் உலகம் ஆண்ட பூங்கிளியை தோற்றுமே பார்வை அழகன்னோ!

பாருலகம் ஆண்டுவந்த ஆண்மை உண்மை அருள் படைத்த பார்வை அன்னோ! தூண்டாத மணிவிளக்கை சுடலெரித்த பார்வை அன்னோ1 இரும்புபோல் ஹ்ருதய நெஞ்சம், இதயம் உருகும் வண்ணம் மரங்கள்போல் வலிய நெஞ்சம், வாழை நார் போல் வசப்படுத்தி, பூதங்கள் என்னும் தழையை கிள்ளி, பொல்லாத குணங்களை வேரறுத்து புண்ணிய குணங்களுக்கு விளக்கேற்றி, மோகனா, மோகினி மாயை விலக்கி, பேரார் தன்னில் பெருகவே கண் வளர்ந்தேன் கோதை முகில் வண்ணன், உகந்து கலந்ததுபோல், உஷாக்காலத்தில் எழுந்திருந்து, ஹரி ஹரி என்னும் அக்னியை கிளப்பி, திருவரங்கம் என்னும் திருவிளக்கேற்றி, ஆராதனம் என்னும் ஆபரணச்செல்லமெடுத்து, சிற்றம் சிறுகாலே என்னும் திறவு கோலாலே, திருக்காப்பு திறந்து,

முத்து, வைரம், வைடூர்யம், வேதம், அஷ்டாக்ஷரம், த்வயம், சரம ஸ்லோகம் என்கிற மந்திரங்களையும் கூடவே சேர்த்து, சரணாகதியை நினைத்து, மரணாகதியை மறந்து, துரிதம், துரிதம் என்று தூய விகக்கேற்றி, பரம பதம் என்று பல்லாண்டு பாடுவதுமே.

உம்பவரும், செம்பனைமேல், மாளிகைமேல், தாளகமாம், செம்பொன் படிகையாம், நாகத்தலையணியாம், படுக்கையில் வாழும் குருமணி தேசத்தில் ஹரியே! ஹரியே கதியாகி, பர்வதங்களை விருக்ஷங்களாக்கி, விருக்ஷத்தின் கீழ் அவதாரமாகி, சப்த சமுத்திரம் ஆறாகி, தசபலி திட்டம் திருமதிலாகி மந்தார புஷ்பத்தில் மாலை தாழ, ஏகசக்கிறாள் பல்லாண்டு பாட

அஷ்டவசுக்கள் வாக்காள் விளக்க, தும்புரு நாரதர் கீதங்கள் இசைக்க, சுக்கில வசுக்கள் சோபனை சொல்ல, சப்த சமுத்திரம் திருப்பள்ளிக்கட்டிலின் கீழ், தச சமுத்திரம் திருப்பால் பரிமாறி, அனந்தன் என்னும் தலைகணை போட்டு, அச்சுதன் என்னும் கால் கோட்டை நாட்டி, ஸ்ரீ கோவிந்தன் என்னும் முத்துகால் நாட்டி ஸ்ரீ ரெங்கநாச்சியார், ஸ்ரீ பூமிதேவி, ஸ்ரீ நீளாதேவியோடு யோக நித்திரை செய்யும்போது பிரும்மாவும் கமலத்தை காணாமல் ஓடி எங்கும் தேடி தாமரை நானத்தோகையிலே

தமையன் கைகொண்ட முதல் ஏது சேவகம், ஏது சேவகம் என்னும் தசரதர் ச்ய்த தபஸினாலே, கௌசலை செய்த பாக்கியத்தினாலே, சீதை மணவாளர் தசரதருக்கே புத்திரராய், மூர்த்தி நால்வராம், திருவயோத்தியில் அவதாரம் செய்து எழுந்தருளினார்.

கைகேயி தந்த வரத்தாலே கானகத்திற்கு சென்று இலங்கையை அழித்து, இராவணனை
ஸம் ஹரித்து விபீஷணருக்கு லங்கா நகர பட்டாபிஷேகம் செய்து வைத்து, சீதையை சிறை மீட்டு அயோத்திக்கு எழுந்தருளி, ஆறில் ஒன்று கடமை வாங்கி, அனைவரையும் த்ருப்தி செய்து, இப்படி கற்ப காலத்தின் நடுவே அரசாண்டிருக்கும்போது, விபீஷணருக்கு திவ்ய விமானத்தை தந்தருளினாய்.

விபீஷணனும்-தான் இந்த பாக்கியம் பெற்றோம் என்று, அடிமேல் பெற்று, முடிமேல் கை கொண்டு இலங்கை நோக்கி எடுக்கபோனதளவு, எடுக்கபோகாதளவு, காவேரியின் நடுவில் சந்திர புஷ்கரணி தென்கரை மேல் புன்னாக விருக்ஷத்தின் கீழே எழுந்தருளினார்.

விபீஷணர் பாதம் விளக்கி, பரிசுத்தம் பண்ணி அந்தி தொழுது அனுஷ்டானம் பண்ணி பாதிரி பூவில் பத்தாயிரம் கொண்டுவந்து, பாரிஜாத பூவில் பத்தாயிரம் கொண்டுவந்து, மகிழம்பூவில் மூவாயிரம் கொண்டுவந்து, திருத்துழாய் தளத்தை ஏராளம் கொண்டுவந்து, அன்று மலர்ந்த செந்தாமரை புஷ்பத்தில் இரண்டாயிரம் கொண்டுவந்து, கஸ்தூரி அரணியின் கணக்கில்லாமல் கொண்டுவந்து, இரு திருவடியில் சமர்ப்பிவித்து,

இக்ஷ்வாகு வம்சத்து ராஜாவானவர் தம்மை தாமே எழுந்தருளிசெய்துவந்த பெருமாளே, மாதவரும் நீரே, மதுசூதனரும் நீரே, ஸ்ரீதரரும் நீரே, செந்தாமரை கண்ணனும் நீரே, ஒரு சப்த சாகரரே, சதுர்புஜரே, மங்கை மணவாளரே, மதுரை மன்னவரே, அம்புவிகரசரே, புண்டரீகாக்ஷரே இப்படி அரண்டும், புரண்டும் பரிதாபம் பண்ணினார். அப்போது பெருமாள், யாம் அந்த ராக்ஷஸ பூமிக்கு வரவல்லோமென்றார். ஸ்ரீராமருள்ளமட்டும் இங்கேயே கண் என்றார்.

ஒருபுறம் வலிய நாடு, இருபுறம் காவேரி, இருபுறம் ரெங்கவிலாஸம், இருபுறம் வலிய நாடு, உறையூர் வல்லி தாயார்,, ஒரு புறம் நானிங்கு மானிடரை ஈடேற்ற வந்தேன், வருஷத்திற்கு ஒரு முறை வந்து நீ போவாயென்று, வருஷத்திற்கு ஒரு முறை நீ வந்து ஆராதனம் செய்வாய் என்றும், திருவடியும், மலரும் விடையும் தந்து அருளி அனுப்பினார். விபீஷணர் தாம் மோக்ஷம் பெற்றதால் இந்த பாக்கியம் பெற்றோமென்று , சிரசால் வகுத்து, தெளிநீர்சார்த்தி, முன்கால் பணிகள் சார்த்தி, முழங்கால் பணிகள் சார்த்தி, திருவிரல் ஆழி சார்த்தி, திருக்கணைக்கால் தண்டை சார்த்தி, ஒரு முத்தோடு ஒரு முத்து ஒரு கோடி விலை பெற்ற திரு முத்து ஹாரத்தை திருமார்பில் திகழவே சார்த்தி,

முத்து, முத்தோடு மாணிக்கம் அறுபதினாயிரம் கோடி விலை பெற்ற திரு நீலநாயக பதக்கத்தை திருமார்பில் திகழவே சார்த்தி, வாகனம் நல்ல வளையள் சார்த்தி, மாணிக்க தோடும் சார்த்தி, கண்டத்தில் காரையும் சார்த்தி, கட்டி முத்து மாலையும் சார்த்தி, ஏழுலகம் ஆண்டவருக்கு யக்ஞோபவீதம் சார்த்தி, பாருலகம் ஆண்டவருக்கு பாண்டியன் கொண்டையும் சார்த்தி ஸர்வேஸ்வரனுக்கு தகுட்டு பீதாம்பரம் சார்த்தி, அழகிய மணவாளனுக்கு அரைநூண்மாலையும் சார்த்தி, அரைவடகிங்கிணியும் சார்த்தி, கண்ணன் உகந்தமாலை, சடகோபன் அளித்த மாலை, சூடிகொடுத்த மாலை, திருமார்பில் திகழவே சார்த்தி,

பொன்னு திருவடியில் புஷ்பம் சமர்ப்பித்து, தங்க திருவடியில் தண்டையும், சியம்பும் சமர்ப்பித்து, பூலோக வாசிக்கு பொங்கல் தளிகை சமர்ப்பிவித்து,பாரளர்ந்த நாதனுக்கு பால் மாங்காய் சமர்ப்பிவித்து, மலைபோல் வளர்ந்தால்போல்

வடகடலும், தெங்கடலும் வளர்ந்தால்போல் முகத்தில் கருண்ட கேசமும், முகத்தில் உருண்டைமுடியும், அண்டம் கயிறாக, ஆற்கடல் பாம்பாக, யக்ஞசித்தன் திருமதிலாகி, எழில்ரங்கத்தம்மான், ஹனுமன் படையும், கருடக்கொடையும், பரிமளமான உடையவரும், வடதிருவாசல் தேசிகரும்,

கோமகளார் எடுத்தக்கொற்றக்குடையும், திருமகளார் எடுத்த திருவந்திகாப்பழகும் இப்பேற்கொண்டு ஸ்ரீரெங்காவதாரத்தை கற்றவரும் கேட்டவரும், கற்றுகொடுத்தவருக்கும், காதுகுளிர கேட்டவருக்கும், சொல்லு, சொல்லு என்று செவிகுளிர கேட்டவருக்கும்,

இன்னும் சொல்லு என்று இருந்திருந்து கேட்டவருக்கும், பின்னும் சொல்லு என்று பிரியமாய் கேட்டவருக்கும், எட்டாத பரமபதம் இமைபொழுதில் கிடைக்கும், தட்டாத பரமபதம் தானே கிடைத்துவிடும், மன்னு திருவோண துவாதசியில் சொல்லி துதிப்பார், சுத்தராகி, பக்தராகி உள்ளும் , புறமும் ஜோதி உடனாய் சேர்ந்திருப்பார், என் எம்பெருமாள் திருவடிகளே சரணம்.

மேற்படி ஸ்ரீரெங்க மகத்துவம் யார் எழுதி வைத்தார் என்று தெரியாது. ஆனால் ஸ்ரீரெங்கத்தில் அரங்கன் பள்ளிகொண்டிருக்கும் அழகு, ஸ்ரீரெங்கத்தில் அமைந்திருக்கும் சந்நதிகள், பகவானின் சிறப்பு, ஆழ்வார்களின் பெருமை இவை அனைத்தையும் நம் கண் முன்னே கொண்டுவந்து நிறுத்துகிறது. படிப்பவர்கள் அதோடு ஸ்ரீரெங்க உலா வருவதுபோல் காட்சியையும் காணலாம்.

Saturday, January 13, 2018

Sri Karanja Nrusimhaswamy, Ahobilam AP.


Sri Karanja Nrusimhaswamy, Ahobilam AP.

------------------------------------------------------

 ஆஞ்சநேயர் எப்போதும் தன்னை ராமரின் சேவகனாகவே முன்நிறுத்திக் கொண்டவர்.

ராமாவதாரம் முடிந்து போன நிலையில் ஆந்திர மாநிலத்தில் உள்ள அகோபிலம் திருத்தலத்தில் ஒரு மரத்தடியில் அமர்ந்து, ராம நாமம் துதித்துக் கொண்டிருந்தார் அனுமன்.

அவர் அமர்ந்திருந்த அகோபில தலமானது, நரசிம்மமூர்த்தியின் அவதார தலம் என்பது குறிப்பிடத்தக்கது.

தவத்தின் போது அனுமனுக்கு ஒரு
ஆசை உண்டானது.

தன் நெஞ்சில் எப்போதும் சுமந்து கொண்டிருக்கும் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியை தரிசனம் செய்ய வேண்டும் என்பதுதான் அது.

வேறு என்ன ஆசை ஆஞ்சநேயருக்கு இருந்து விடப் போகிறது?

அதே எண்ணத்துடன் ராமரை நினைத்து கண்ணை மூடி தியானித்துக் கொண்டிருந்தார்.

அவரது எண்ணத்தை நிறைவேற்ற முடிவு செய்தார் ஸ்ரீராமபிரான்.

மேலும் தன் அன்புக்குரிய அடியவனான அனுமனுடன் சற்று விளையாடவும் நினைத்தார் ஸ்ரீராமபிரான்.

அதன்படி அனுமனுக்கு காட்சி கொடுக்க அவர் முன் தோன்றினார்.

ஆனால் அந்த உருவத்தைப் பார்த்து அனுமன் மகிழ்ச்சி கொள்ளவில்லை.

ஏனெனில் அனுமன் முன்பு அவர் ராமபிரானாக காட்சி தருவதற்கு பதில், நரசிம்ம மூர்த்தியாகவே தோன்றியிருந்தார்.

இதனால் மகிழ்வதற்கு பதிலாக, குழப்பத்தில் ஆழ்ந்து போனார் ஆஞ்சநேயர்.

அத்துடன் ஸ்ரீராமரின் முகத்தைக் காணாது, அவரது முகம் வாடிப்போனது.

நரசிம்ம மூர்த்தியின் திருமுகத்தை பார்த்த அனுமனின் முகத்தில் கேள்வி ரேகை படர்ந்திருந்தது.

அது ‘என் ராமன் எங்கே?’ என்று கேட்பதுபோல் இருந்தது.

நரசிம்ம மூர்த்தி சற்றே முகம் மலர்ந்து, ‘ராமனும், நானும் ஒருவர்தான்’ என்பது போல் தலையசைத்து புன்னகைத்தார்.

அது அனுமனுக்கு புரிந்தாலும், அதை ஏற்றுக் கொள்ள அவர் மனம் ஒப்பவில்லை.

'அழகே உருவான ராமபிரான் எங்கே?
பயங்கரத் தோற்றத்துடன் இருக்கும் இவர் எங்கே?’ என்பது போல் எண்ணம் எழுந்தது.

‘விண்ணும், மண்ணும், இந்தப் பால் வெளியும், பஞ்ச பூதங்களும், சர்வ மார்க்கங்களும், சகல தேவர்களும் எனது அம்சமே’ என்பதை அனுமனுக்கு உணர்த்த எண்ணிய இறைவன் ஒரு காரியம் செய்தார்.

தனது திருக்கரத்தில் வில்லேந்தி காட்சி தந்தார்.

பின்னர் ‘நன்றாக என்னை உற்றுப் பார்’ என்று ஆணையிட்டார்.

அனுமனும் உற்றுநோக்கினார்.

சிரத்துக்கு மேல் ஆதிசேஷன் படம் விரித்துக் குடைபிடிக்க, கரங்களில் சக்கரம், கோதண்டம், வில், அம்பு தாங்கி அற்புதமாய் காட்சி தந்தார் நரசிம்மர்.

அனுமனுக்கு உண்மை புரிந்தது.

ஸ்ரீ நரசிம்மரும், ஸ்ரீராமரும் ஸ்ரீமந் நாராயணரின் அம்சமே என்பதை அறிந்து கொண்டார்.

கண்ணீர் மல்க நெடுஞ்சாண்கிடையாக விழுந்து நமஸ்கரித்தார்.

அனுமனுக்கு ஸ்ரீநரசிம்மமூர்த்தி வில்லேந்திய கோலத்தில் தந்தருளிய காட்சியை, இன்றும் அகோபிலத்தில் தரிசிக்கலாம்.

கருங்காலி மரத்தடியில் ஸ்ரீநரசிம்மர் அனுமனுக்குக் காட்சி தந்ததால், இந்த நரசிம்மருக்கு ஸ்ரீகரஞ்ச நரசிம்மர் என்ற திருநாமம் நிலைபெற்றது.

Thursday, January 11, 2018

ஸ்ரீமன் நாராயண




#ஸ்ரீமன்_நாராயண ஸ்ரீமன் நாராயண
ஸ்ரீமன் நாராயண நீ ஸ்ரீ பாதமே ஷரனு
-
கமலா சதி மூகக்கமல கமலஹித
கமலப்ரியா கமலெக்ஷனா
கமலா சனசாஹித, கருட கமன ஸ்ரீ
கமலலா நாபா நீ பதகமலமே ஷரனு || 1 ||
-
பரம யோகிஜன பாகதேய ஸ்ரீ
பரமபுருஷா பராத்பரா
பரமாத்மா பரமானுருப ஸ்ரீ
திருவேங்கதாகிரிதேவா ஷரனு || 2 ||
Image may contain: 9 people, indoor
🍀#ஸ்ரீ #வேங்கடேச #சுப்ரபாதம்🍀
-
கெளசல்யா சுப்ரஜா ராம
பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே 
உத்திஷ்ட நர ஸார்தூல
கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்
-
கெளசல்யா சுப்ரஜா ராம
பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே 
உத்திஷ்ட நர ஸார்தூல
கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்
-
உத்திஷ்டோத்திஷ்ட கோவிந்த 
உத்திஷ்ட கருடத்வஜ
உத்திஷ்ட கமலா காந்தா
த்ரைலோக்யம் மங்களம் குரு
-
உத்திஷ்டோத்திஷ்ட கோவிந்த 
உத்திஷ்ட கருடத்வஜ
உத்திஷ்ட கமலா காந்தா
த்ரைலோக்யம் மங்களம் குரு
-
மாத சமஸ்த ஜகதாம் மது கைடபாரே
வக்ஷோ விஹாரிணி மனோகர திவ்ய மூர்த்தே
ஸ்ரீ ஸ்வாமினி, ச்ரிதஜன ப்ரிய தான சீலே
ஸ்ரீ வேங்கடேச தயிதே தவ சுப்ரபாதம் 
-
திருநெறிய தமிழோசை -சைவமும் தமிழும் 
-
தவ சுப்ரபாதம் அரவிந்த லோசனே
பவது பிரசன்ன முக சந்திர மண்டலே
விதி சங்கரேந்திர வனிதாபிர் அர்ச்சிதே
விருஷ சைலநாத தயிதே தயாநிதே
-
அத்ரிஆதி சப்தரிஷய சமுபாஸ்ய சந்த்யாம்
ஆகாச சிந்து கமலானி மனோகரானி
ஆதாய பாதயுகம் அர்ச்சயிதும் ப்ரபந்நா
சேஷாத்ரி சேகரவிபோ தவ சுப்ரபாதம்
-
பஞ்சானன ஆப்ஜபவ சண்முக வாசவாத்யா
த்ரைவிக்ரமாதி சரிதம் விபுதா ச்துவந்தி
பாஷாபதி படதி வாசர சுத்திமாராத்
சேஷாத்ரி சேகரவிபோ தவ சுப்ரபாதம்
-
-
ஈஷத் ப்ரபுல்ல சரசீருஹ நாரிகேள
பூகத்ருமாதி சு மநோகர பாலிகாநாம்
ஆவாதி மந்த மநிலஸ் சக திவ்யகந்தை
சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம் 
-
உந்மீல்ய நேத்ர யுக முத்தம பஞ்ஜரஸ்தா
பாத்ரா வசிஷ்ட கதலீபல பாயசாநி
புக்த்வா சலீலமத கேளிசுகா: படந்தி
சேஷாத்ரி சேகரவிபோ தவ சுப்ரபாதம்
-
தந்த்ரீ ப்ரகர்ஷ மதுர ஸ்வநயா விபஞ்ச்யா
காயத்ய நந்த சரிதம் தவ நாரதோபி
பாஷாச மக்ர அசக்ருத் கரசார ரம்யம்
சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்
-
ப்ருங்காவலீ ச மகரந்த ரஸா நுவித்த
ஜங்கார கீத நிநதைஸ் சக சேவநாய
நிர்யாத்யு பாந்த சரஸீ கமலோ தரேப்ய
சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம் 
-
-
யோஷா கணேன வரதத்னி விமத்ய மானே
கோசால யேஷூ ததி மந்தன தீவ்ர கோஷா
ரோஷாத் கலிம் விததே ககுபஸ்ச கும்பா
சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம் 
-
பத்மேச மித்ர சதபத்ர கதாலி வர்க்கா
ஹர்த்தும் ச்ரியம் குவலயஸ்ய நிஜாங்க லக்ஷ்ம்யா
பேரீ நிநாத மிவ பீப்ரதி தீவ்ர நாதம்
சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம் 
-
ஸ்ரீ மந் அபீஷ்ட வரதாகில லோக பந்தோ
ஸ்ரீ ஸ்ரீநிவாச ஜகதேக தயைக சிந்தோ
ஸ்ரீ தேவதா க்ருஹ புஜாந்தர திவ்ய மூர்த்தே
ஸ்ரீ வேங்கடாசலபதே தவ சுப்ரபாதம்
-
ஸ்ரீ சுவாமி புஷ்கரிணி- காப்லவ நிர்மலாங்கா
ச்ரேயோர் திநோ, ஹர விரிஞ்சி சனந்தன ஆத்யா
த்வாரே வசந்தி வரவேத்ர ஹதோத்த மாங்கா:
ஸ்ரீ வேங்கடாசலபதே தவ சுப்ரபாதம்
-
ஸ்ரீ சேஷசைல கருடாசல வேங்கடாத்ரி
நாராயணாத்ரி வ்ருஷபாத்ரி வ்ருஷாத்ரி முக்யாம்
ஆக்யாம் த்வதீய வசதே ரநிசம் வதந்தி
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்
-

சேவாபரா: சிவ சுரேஷ க்ருசானு தர்ம
ரக்ஷோம்பு நாத பவமான தனாதி நாதா
பத்தாஞ்ஜலி ப்ரவிலசந் நிஐ சீர்ஷ தேசா:
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்
-
தாடீஷூதே விஹக ராஜ மிருகாதி ராஜ
நாகாதி ராஜ கஜ ராஜ ஹயாதி ராஜா
ஸ்வஸ்வ அதிகார மஹி மாதிகம் அர்தயந்தே
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்
-
தாடீஷூதே விஹக ராஜ மிருகாதி ராஜ
நாகாதி ராஜ கஜ ராஜ ஹயாதி ராஜா
ஸ்வஸ்வ அதிகார மஹி மாதிகம் அர்தயந்தே
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்
-
த்வத் பாத தூளி, பரித ஸ்புரித உத்தமாங்கா
சுவர்கா அபவர்க நிரபேக்ஷ, நிஜாந்த ரங்கா!
கல்ப ஆகம ஆகலநயா ஆகுலதாம் லபந்தே
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்
-
த்வத் கோபுர ஆக்ர சிகராணி, நிரீக்ஷ மாணா
ஸ்வர்கா அபவர்க பதவீம், பரமாம் ச்ரயந்த!
மர்த்யா மநுஷ்ய புவனே, மதி மாச்ரயந்தே
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்!
-
ஸ்ரீ பூமி நாயக தயாதி குண அம்ருத ஆப்தே
தேவாதி தேவ ஜகத் ஏக சரண்ய மூர்த்தே
ஸ்ரீமந் அனந்த கருடாதிபிர் அர்ச்சி தாங்க்ரே
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்
-

ஸ்ரீ பூமி நாயக தயாதி குண அம்ருத ஆப்தே
தேவாதி தேவ ஜகத் ஏக சரண்ய மூர்த்தே
ஸ்ரீமந் அனந்த கருடாதிபிர் அர்ச்சி தாங்க்ரே
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்
-
ஸ்ரீ பத்மநாப புருஷோத்தம வாசுதேவ
வைகுண்ட மாதவ ஜனார்த்தன சக்ர பாணே
ஸ்ரீ வத்ஸ சிஹ்ன சரணாகத பாரிஜாத
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்
-
கந்தர்ப்ப தர்ப்ப ஹர சுந்தர திவ்ய மூர்த்தே
காந்தா குசாம் புருஹ குட்மல லோல த்ருஷ்டே
கல்யாண நிர்மல குணாகர திவ்ய கீர்த்தே
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்
-
மீனாக்ருதே- கமட- கோல- ந்ருசிம்ம- வர்ணிந்
ஸ்வாமிந்- பரஸ்வத தபோதன- ராமசந்திர-
சேஷாம்ச ராம- யது நந்தன- கல்கி ரூப-
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்
-
-
ஏலா லவங்க கனசார சுகந்தி தீர்த்தம்
திவ்யம் வியத்சரிதி ஹேம கடேஷூ பூர்ணம்
த்ருத் வாத்ய வைதிக சிகாமணய ப்ருஹ்ருஷ்டா
திஷ்டந்தி வேங்கட பதே தவ சுப்ரபாதம்
-
பாஸ்வான் உதேதி விகசாநி சரோருகானி
சம்பூர யந்தி நினதை ககுபோ விகங்கா
ஸ்ரீவைஷ்ணவா சததம் அர்த்தித மங்களாஸ்தே
தாமாச்ரயந்தி தவ வேங்கட சுப்ரபாதம்
-
பிரம்மா ஆதய சுரவரா ச மகர்ஷ யஸ்தே
சந்தஸ் சனந்தன முகாஸ் தவ யோகி வர்யா
தாமாந்திகே தவஹி மங்கள வஸ்து ஹஸ்தா
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்
-
லஷ்மீ நிவாச நிரவத்ய குணைக சிந்தோ
சம்சார சாகர சமுத்தர அநைக சேதோ
வேதாந்த வேத்ய நிஜ வைபவ பக்த போக்ய
ஸ்ரீவேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்
-
-
இத்தம் விருஷாசல பதே, இக சுப்ரபாதம்
யே மானவா, ப்ரதி தினம் படிதும் ப்ர-விருத்தா
தேஷாம் பிரபாத சமயே, ஸ்மிருதி ரங்க பாஜாம்
பிரஜ்ஞாம், பர ஆர்த்த சுலபாம், பரமாம் ப்ரசுதே
Image may contain: one or more people

🍀#ஸ்ரீ #கணேச #பஞ்சரத்தினம்🍀
-
#முதா கராத்த மோதகம் ஸதா விமுக்தி ஸாதகம்
கலா தராவ தம்ஸகம் விலாஸிலோக ரக்ஷகம் |
அநாயகைக நாயகம் வினாசஸிதேப தைத்யகம்
நதாஸுபாஸு நாஸகம் நமாமி தம் விநாயகம் || -1🍀
-
🍀மாதுமை பெற்ற மகிழ்வதனால்
மழகளிராக வந்தவனே!
மோதகம் கரத்தில் ஏந்தியதால்
மோனமும் மகிழ்வுங் கொண்டவனே!
போதகத் திருமாமுகத்தவனே!
பூசைகள் புரிவோர் யாவருக்கும்
நாதனே துதிக்கை தூக்கித்தான்
நாளும் முக்தியருள்பவனே! சந்திரக் கலையைத் தரித்தவனே!
சந்ததம் உந்தன் சரிதமதை
வந்திவண் கூறும் அடியவரை
வாழ்த்தி வாழ வைப்பவனே!
சிந்தா குலங்கள் தீர்த்திடவே
சீர்மிகு தலைவன் தானாகி
அந்தமில் அரசே கஜாகரன்தன்
அந்தகன் ஆனாய் கணபதியே!🍀
🍀#நதேதராதி பீகரம் நவோதி தார்க்க பாஸ்வரம்
நமத்ஸுராரி நிர்ஜரம் நதாதிகாப துத்தரம் |
ஸுரேச்வரம் நிதீச்வரம் கஜேச்வரம் கணேச்வரம்
மஹேச்வரம் தமாச்ரயே பராத்பரம் நிரந்தரம் || -2🍀
-
-
🍀தன்னை வணங்கும் தரமறியார்
தம்மைப் பயத்தால் தானழுத்திப்
பின்னர் வணங்கும் பேறளித்தே,
பிழைகள் போக்கும் பெருமனத்தோய்
என்றும் ஏத்தும் அமரரையே
எதிர்க்கும் அசுரர் குலமழிய
வென்றாய் வெற்றி விநாயகனே
விளங்கு தேவர்க் கதிபதியே!
எதையும் வேண்டா எளியோர்க்கும்
எதையும் அளிக்கும் ஏரம்பா
புதையல் போன்ற பொருள்சேரப்
புகலும் அதிதே வதைநீயே
புதைகொள் மதத்த, வேதகணம்
போற்றி வணங்கப் பெறுவாயே?
இதையிவன் எழுத இவன்முன்னோர்
எழுதிய கருத்தும் இதுதானே?
சண்டிகே சுரரும் அவர்மேலாய்ச்
சர்வே சுரர்க்கும் மேலாக
உண்டெனக் கூறும் உயர்பொருளாய்
உலகின் மூல காரணனே!
பண்டுளோர் புரமே மாயமென்பர்
புரத்தின் மேலாம் பரம்பொருளே
அண்டி னோர்க்கே அபயகரம்
அளித்தே காக்குங் கணபதியே!🍀
-
🍀#ஸமஸ்த லோக ஸங்கரம் நிரஸ்த தைத்ய குஞ்ஜரம்
தரேதரோதரம் வரம் வரேப வக்த்ர மக்ஷரம் |
க்ருபாகரம் க்ஷமாகரம் முதாகரம் யசஸ்கரம்
மனஸ்கரம் நமஸ்க்ருதாம் நமஸ்கரோமி பாஸ்வரம் ||-3🍀
-
🍀ஈரேழ் உலக மக்களுக்கும்
இன்பம் அளிக்க வல்லவனே!
சீரே துமிலா கஜாசுரனைச்
சீறிப் பாய்ந்தே வதஞ்செய்தாய்!
பேரா தரிக்கும் பெருமானே
பேருல கைநின் பெருவயிற்றுள்
தீரா இன்பப் பெருக்குடனே
தினமும் தாங்கிக் காப்பவனே! அழகிய ஐரா வதம்போன்றே
அமைந்த முகத்தோய் அனுதினமும்
பொழியுங் கருணை மாமுகிலே
பொலிவார் புகழ்சேர் பூங்கரத்தோய்
மொழியிற் செயலில் முறையறியா
மூடர் தமக்கும் முன்னிற்பாய்
தொழுவோர்க் கிரங்கி மனமகிழத்
துணையாய் வருவாய் கணபதியே!🍀
-
🍀அகிஞ்சனார்த்தி மார்ஜனம் சிரந்தனோக்தி பாஜனம்
புராரி பூர்வநந்தனம் ஸுராரி கர்வ சர்வணம் |
ப்ரபஞ்சநாஸபீஷணம் தனஞ்ஜயாதி பூஷணம்
கபோல தான வாரணம் பஜே புராண வாரணம் ||-4🍀
-
-
🍀#வணங்கும் அடியார் தமைவாட்டும்
வறுமை, துன்பம் வேரறுப்பாய்!
மணக்கும் மறையின் மாறாத
மகத்துவம் அறிந்தே துதி செய்வோர்
இணக்கத் திற்கே இயல்புடனே
இன்பம் அளிக்கும் இளங்களிறே!
கணமும் பூத கணங்களையே
காக்குங் காரார் கணபதியே!
திரிபுர மெரித்த திறனுடையான்
தினமகிழ் வறுநல் திருமகனே!
புரிபெரும் போரில் புல்லசுரர்
புலம், குலம் அழித்த போர்க்களிறே!
கரிபோல் எருமை தனிலூரும்
காலன் கணக்கைக் கடந்தடியார்
புரியும் பூசை ஏற்றிந்த
பூதலம் காக்கும் புண்ணியனே!
விளங்கு விசையன் போன்றோர்தம்
வில்லின் ஆற்றல் விரிவு பெறக்
களத்திற் காட்டுந் திறனுக்கே
காரணனான கணபதியே!
அளக்க லாகா மதநீரை
அருவியாக நிதம் பொழிந்தே
களகம் ஊர்ந்த கணபதியே!
களிக்கும் நெஞ்சிற் கதிபதியே!🍀
-
#நிதாந்த காந்த தந்த காந்தி
மந்த காந்த காத்மஜம்
அசிந்த்ய ரூப மந்தஹீன மந்தராய க்ருந்தனம் |
ஹ்ருதந்தரே நிரந்தரம் வஸந்த மேவ யோகினாம்
தமேக தந்தமேவ தம் விசிந்தயாமி ஸந்ததம் ||-5🍀
-
🍀தந்தத் தழகே தனியழகு
தகுபல் வரிசை மிகஅழகாம்
அந்தகனுக்கும் அந்தகனாம்
அரந்திரு மகனே அகத்தினிலே
சிந்தித் தறிய இயலாத
சீராம் வடிவச் செந்தூரமே!
வந்த வினையும் வருவினையும்
வாடிப் போக வந்தருளே! பிறப்பிறாப் பற்ற பெருமானே
பிழையறி யாத ஞானியரின்
அறந்தளிர் தருவாம் இதயமதில்
அறிந்தினி தமர்வாய்! அறியதொரு
குறிநெறி காட்டுங் குணக்குன்றே!
கொம்பில் ஒன்றைக் கொம்பொடித்தே
அறத்தின் சாறாம் பாரதத்தை
அளித்தனை வாழ்த்தி வணங்குவனே!
நூற்பயன்🍀
-
🍀மஹா கணேஸ பஞ்சரத்ன மாதரேண யோந்வஹம்
ப்ரஜல்பதி ப்ரபாதகே ஹ்ருதி ஸ்மரந் கணேச்வரம் |
அரோகதாமதோஷதாம் ஸுஸாஹிதீம்ஸுபுத்ரதாம்
ஸமாஹிதாயு ரஷ்டபூதி மப்யுபைதி ஸோசிராத் || -6🍀
-
🍀காலை எழுந்து கருத்துடனே கணேச பஞ்ச ரத்தினத்தைச்
சீலஞ் சிறக்கச் செயல்சிறக்க சிந்தித் துரைத்துத் தியானிக்கக்
காலம் மாறுங் கடுந்துயரம் கணத்தில் மாறும் கனுவுறுநல்
மூலப் பொருளாங் கணநாதன் முன்னின் றருள்வான் முயல்வீரே!🍀
Image may contain: 2 people, indoor


#பூக்களாலும் தமிழ்ப் பாக்களாலும் பரந்தாமனை ஆண்டாள்! 
-
பூக்களாலும் தமிழ்ப் பாக்களாலும் பரந்தாமனை ஆண்டாள்! அதனால்தான். 'திருவாடிப் பூரத்து ஜகத்துதித்தாள் வாழியே' என்று வேதப் பிரான் பட்டர் பாடி இருக்கிறார். அவரே, 'கோதை பிறந்த ஊர் #கோவிந்தன் வாழும் ஊர்' என்று #கோதை பிறந்த ஊர்தான் #கோவிந்தன் என்னும் இறைவன் வாழும் ஊர் என்றும் போற்றி இருக்கிறார். இதில் ஒரு மறைபொருளும் உண்டு. #கோவிந்தன் என்னும் இறைவன் எங்கெல்லாம் இருப்பான் என்று கேட்டால், கோதையைப் போன்று #பிரேம #பக்தியில்திளைத்திருக்கும் பக்தர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ, அங்கெல்லாம் #இருப்பான் என்றும் கொள்ளலாம்.
-
பக்தர்களில் #இரண்டு #ரகம் உண்டு. பகவானிடம் தனக்கு, 'அது #வேண்டும்#இது #வேண்டும்' என்று கேட்கும் பக்தர்கள் ஒரு வகை என்றால், #பகவானே#வேண்டும் என்று விரும்பும் பக்தர்கள் ஒரு வகை. பகவானே வேண்டும் என்றால், பகவானின் திருவடிகளில் ஐக்கியமாகிவிட வேண்டும் என்றுதான் பொருள்.
-
ஆனால், ஆண்டாளைப் பொறுத்தவரை, அவள் சாட்சாத் மகாலட்சுமியின் அம்சம் என்பதால், பகவானை தன் மணாளனாக வரித்துக்கொண்டாள்.
-
தமிழக அரசின் சின்னமாகத் திகழும் கோபுரம் அமைந்திருக்கும் ஶ்ரீவில்லிபுத்தூர் திருத்தலம்தான் ஆண்டாள் அவதரித்த திருத்தலம்.
அந்தத் தலத்தில் பிரசித்தி பெற்று விளங்கிய வடபத்ரசாயி கோயிலில் பகவானின் கைங்கர்யத்தில் ஈடுபட்டிருந்தவர்தான் விஷ்ணுசித்தர் என்னும் பெரியாழ்வார். 
-
தினமும் நறுமணப் பூக்களும் துளசிச் செடிகளும் பூத்துக் குலுங்கும் நந்தவனத்துக்குச் சென்று மலர்களைப் பறித்து, பூமாலையாகக் கட்டி இறைவனுக்குச் அணிவிப்பதை தனது தலையாய கடமையாகக் கொண்டு வாழ்ந்திருந்தார். 
-
ஒரு நாள் நந்தவனச்செடிகளுக்கு நீர் வார்த்துக் கொண்டிருந்த வேளையில், துளசிச் செடிகளுக்கு நடுவே உலகத்து அழகையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து பிறந்தது போல் ஒரு பச்சிளம் குழந்தையைக் கண்டார்.
-
அன்று முதல் அந்தக் குழந்தையை தனது மகளாக பாவித்து, பாராட்டி சீராட்டி பாசத்துடன் வளர்த்து வந்தார். 'கோதை' என்ற பெயரில் அந்தக் குழந்தை குதூகலமாக பெரியாழ்வாரின் மடியிலும் பெருமாளின் பக்தியிலும் திளைத்து வளர்ந்து வந்தது. பெரியாழ்வாரோடு சேர்ந்து கோதையும் பூக்களைப் பறித்து வந்து கொடுப்பாள்.
-
சிறுமியாக இருந்த கோதை மணப் பருவம் வந்தடைந்தபோதும் சதா சர்வ காலமும் பெருமாளின் நினைவுதான். நாளாக நாளாக பெருமாளையே தன் மணாளனாகக் கொண்டு மணம் செய்ய ஆசையும் ஏக்கமும் அடைந்தாள். எம்பெருமானின் மகிமைகளை எண்ணி எண்ணி மகிழ்ந்தாள்.
-
#ஸ்ரீவில்லிபுத்தூர்க் கோயிலுக்கு நித்யப்படி பெருமாளுக்கு மாலை கட்டி சாற்றுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அப்படி அவர் கட்டி வைத்திருந்த மாலையை, கோதை ஒரு நாள் தற்செயலாக அணிந்து கண்ணாடி முன் நின்று தன் அழகை தானே ரசித்துப் பார்த்தாள். அப்போது தன்னோடு பெருமாளையும் சேர்த்துப் பார்த்து ரசித்தாள். அதில் அவளுக்கு அளவற்ற ஆனந்தம் ஏற்படவே, தினமும் பெருமாளுக்கு பெரியாழ்வார் தொடுத்து வைக்கும் மாலையை அணிந்துகொள்வதை வழக்கமாகவே கொண்டாள். இந்தச் சம்பவம் எதுவும் பெரியாழ்வாருக்குத் தெரியாது. எத்தனை நாள் இந்தச் சம்பவம் நடந்தது என்பது ஆண்டாளுக்கும் வடபத்ரசாயிக்கும்தான் வெளிச்சம்! ஆனால், ஆண்டாளுக்கு 
பகவானிடம் இருக்கும் பிரேம பக்தி உலகத்துக்குத் தெரியவேண்டுமே!
-
ஒருநாள் மாலையைக் கட்டி வைத்துவிட்டு ஒரு வேலையாக வெளியே சென்றவர், சற்று நேரத்தில் வீட்டுக்கு வந்தார். அப்போது அவர் கண்ட காட்சி, அவருடைய மனதை மிகவும் வேதனைப் படுத்தியதுடன், செல்லமாக சீராட்டி பாராட்டி வளர்த்த கோதையிடம் கோபம் கொள்ளவும் வைத்தது.
-
'ஒருவர் அணிந்த மாலையை பெருமாளுக்கு அணிவிக்கக்கூடாது என்பது உனக்குத் தெரியாதா?' என்று செல்ல மகளை கோபித்துக்கொள்ளவும் செய்தார். அன்றைக்கு அவரால் பெருமாளுக்கு புஷ்ப கைங்கர்யம் செய்ய இயலாமல் போய்விட்டது. கோதையின் செயலால் மனம் தளர்ந்து சோர்ந்த நிலையில் அப்படியே உறங்கியும் விட்டார்.
ஆழ்ந்த நித்திரையில் இருந்தவரின் கனவில் தோன்றிய பெருமாள், 'ஏன் எனக்கு பூமாலை சாத்தவில்லை?' என்று ஏதும் அறியாதவர்போல் கேட்டார். 
-
'சுவாமி, தாங்கள் அறியாததும் உண்டா என்ன? ஒருவர் சூடிய மாலையை தங்களுக்கு எப்படி அணிவிக்க முடியும்? அதனால்தான் கோதை சூடிய மாலையை தங்களுக்கு என்னால் அணிவிக்க முடியாமல் போய்விட்டது. அந்த வருத்தத்தில் அப்படியே உறங்கிவிட்டேன்' என்று கூறினார்.
-
#ஆழ்வாரின் வார்த்தைகளைக் கேட்ட பெருமாள் மெள்ள புன்னகைத்தபடியே, 'விஷ்ணுசித்தரே, நீர் எந்தத் தவறும் செய்யவில்லை. ஆண்டாள் என்னிடம் கொண்டிருக்கும் பிரேமை மகத்தானது. அவள் சூடிக்களையும் மாலையில்தான் நறுமணம் அதிகமாகக் கமழ்கிறது. இனி, ஆண்டாள் சூடித் தரும் மாலையையே எனக்கு அணிவிப்பாயாக' என்று கூறி மறைந்தார்.
மெய்சிலிர்த்துப் போன பெரியாழ்வார், உறக்கத்தில் இருந்து எழுந்துகொண்டார். 
-
தம்மிடம் வளரும் பெண் சாதாரண பெண் அல்ல, மகாலட்சுமியின் அம்சம் என்பதைப் புரிந்துகொண்டார். மகாலட்சுமி தேவியைத் தன் மகளாக வளர்க்கும் பாக்கியம் தனக்குக் கிடைத்ததை எண்ணி பூரித்துப் போனார்.
-
துவாபரயுகத்தில் பிரேம பக்தியின் மகிமையை உணர்த்த ராதா தேவி இருந்ததைப் போல், இந்தக் கலியுகத்தில் பிரேம பக்தியின் மகத்துவத்தை நமக்கெல்லாம் உணர்த்த மகாலட்சுமி தேவியே ஆண்டாளாக அவதரித்து, சூடியும் பாடியும் கொடுத்து, பரந்தாமனை ஆண்டதுடன், தூய தமிழ்ப் பாக்களால் நம்மையும் ஆண்டு, நல்ல வழியில் நம்மை நடத்திச் செல்கிறாள்!

 அபூர்வ ஸ்லோகம் ராமன் பட்டாபிஷேகத் திருநாளில் அவ்விருவரையும் போற்றி அனுமன் பாடிய ஸ்தோத்திரத் தொகுப்பு இது.  இந்த ஸ்லோகங்களை முடிந்தபோதெல்லாம...