-
🍀நம்பியவரைக் கைவிடாதவன், பக்தர்கள் மீது அன்பு கொண்டவன் என்றெல்லாம் அர்த்தம் அச்சுதன் பெயருக்கு. இந்தப் பெயரைச் சொல்லித் துதித்தால் துக்கம், வறுமை, பிணிகள் என்று எதுவும் மிச்சம் இல்லாமல் தொலையும் என்கின்றன புராணங்கள். (திருநெறிய தமிழோசை - சைவமும் தமிழும்) மன நலமும் உடல் நலமும் சீராகும். மதி நலம் சிறக்கும். வறுமை விலகி வலிமை பிறக்கும். பிறவிப் பெருங்கடலைக் கடக்க உதவும் திருநாமம் இதுவே. இப்படியெல்லாம் சொல்கிறார் ஆதிசங்கர மகான்.🍀
-
"🍀#அச்சுதம் கேசவம் ராம நாராயணம்
கிருஷ்ண தாமோதரம் வாசுதேவம் ஹரிம்
ஸ்ரீதரம் மாதவம் கோபிகா வல்லபம்
ஜானகி நாயகம் ராமசந்திரம் பஜே.🍀"
-
#பொருள் : 🍀பக்தர்களைக் கைவிடாதவன் என்பதால் அச்சுதன் என்ற பெயர் கொண்டவனே; பாவங்களைப் போக்குபவனே, பரமாத்மாவே, ராமனாகவும் கிருஷ்ணனாகவும் அவதாரம் செய்தவனே, புருஷோத்தமனே, எங்கும் நிறைந்தவனே, வசுதேவரின் மைந்தனே பகவானே, ஒருபொழுதும் எதிரிகளால் வெல்ல முடியாதவனே,(திருநெறிய தமிழோசை - சைவமும் தமிழும்) நீ இப்படிப்பட்ட பெருமைகளை உடையவன் என்பதால் அல்லவா பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய செல்வ மகள் மற்ற அனைவரையும் ஒதுக்கிவிட்டு உன்னைக் கணவனாக அடைந்தாள். தூயவனான நீயே எனது எல்லா துக்கங்களையும் சற்றும் மிச்சமில்லாமல் போக்க வேண்டும்.🍀
-
Youtube Link : https://youtu.be/3xQqL1xA16I
-
|| ----------- 🍀ஓம் நமோ நாராயணா🍀 ----------- ||
No comments:
Post a Comment