அபூர்வ ஸ்லோகம்
ராமன் பட்டாபிஷேகத் திருநாளில் அவ்விருவரையும் போற்றி அனுமன் பாடிய ஸ்தோத்திரத் தொகுப்பு இது.
இந்த ஸ்லோகங்களை முடிந்தபோதெல்லாம் சொல்லலாம்; குறைந்தபட்சம் ஸ்ரீராமந வமி அன்றாவது முழுமனதோடு சொல்ல, வாழ்க்கையில் எல்லா சிக்கல்களும் தீர்ந்து வளமான, மேன்மையான, சந்தோஷமான வாழ்வு அமையும்
அயோத்யாபுரநேதாரம் மிதிலாபுரநாயிகாம்
ராகவாணாமலங்காரம் வைதேஹானாமலங்க்ரியாம்
அயோத்தியா பட்டினத்திற்கு அரசனே, ரகு வம்சத்து அலங்காரம் பூண்ட ராகவனே, ஸ்ரீராமா, மிதிலா பட்டினத்திற்கு அரசியே, விதேக வம்சத்து அலங்காரம் பூண்ட வைதேகியான சீதாதேவியே நமஸ்காரம்.
ரகூணாம் குலதீபம் ச நிமீனாம் குலதீபிகாம்
ஸூர்யவம்ஸ ஸமுத்பூதம் ஸோமவம்ஸ ஸமுத்பவாம்
ரகு வம்சத்திற்கு தீபம் போல் பிரகாசத்தைத் தருபவரே, சூர்ய வம்சத்தில் பிறந்தவரே ஸ்ரீராமா, நிமி வம்சத்தின் தீபம் போல் பிரகாசிப்பவளே, சந்திர வம்சத்தில் பிறந்தவளே, சீதாதேவியே, நமஸ்காரம்.
புத்ரம் தஸரதஸ்யாத்யம் புத்ரீம் ஜனகபூபதே:
வஸிஷ்டானுமதாசாரம் ஸதானந்தமதானுகாம்
தசரதருடைய மூத்த குமாரனே, வசிஷ்டரால் உபதேசிக்கப்பட்ட ஆசாரத்தை மேற்கொண்டவரே ஸ்ரீராமா, ஜனகனுடைய மூத்த குமாரியே, சதானந்தரின்
உபதேசத்தை அனுசரிப்பவளே சீதாதேவியே, நமஸ்காரம்.
கௌஸல்யா கர்ப்ப ஸம்பூதம் வேதிகர்ப்போதிதாம்
ஸ்வயம்
புண்டரீகவிஸாலாக்ஷம் ஸ்புரதிந்தீவரேக்ஷணாம்
கௌசல்யையின் கர்ப்பத்தில் உண்டானவரே, தாமரை மலர் போன்ற அகன்ற கண்களால் அருள்பவரே, ஸ்ரீராமா, யாகவேதியின் மத்தியில் ஸ்வயமா கவே ஆவிர்பவித்தவளே, மலர்ந்த நீலோத்பலம் போன்ற கருணைக் கண்கள் கொண்டவளே, சீதாதேவியே, நமஸ்காரம்.
சந்த்ரகாந்தானனாம்போஜம் சந்த்ரபிம்போபமானனாம்
மத்தமாதங்க கமனம் மத்த ஹம்ஸவதூகதாம்
சந்திரன் போன்ற அழகிய முகமுடையவரே, மதங்கொண்ட யானை போன்ற நடையழகு கொண்டவரே, ஸ்ரீராமா, சந்திரனுக்கொப்பான முகமுடையவளே,
பேரெழிலோடு நடைபயிலும் அன்னப்பறவை போன்ற நடையழகு கொண்டவளே, சீதாதேவியே