🌹கிருஷ்ண பக்தி கதை
*****************************
🌹மகுடி இசைத்த கண்ணன்.
**********************************
கண்ணன் என்றாலே புல்லாங்குழல்தான் நம் நினைவுக்கு வரும். ஆனால், கண்ணனின் கரங்களில் மகுடி தவழ்ந்த சம்பவம் ஒன்று உண்டு.
மகாபாரதத்தில் கௌரவர்கள் எப்போதுமே பாண்டவர்களிடம் துவேஷம் கொண்டவர்களா க இருந்தனர். குறிப்பாக, பீமனைக் கண்டாலே துரியோதனனுக்கு மாளாத வெறுப்பு.
கெட்ட குணங்களுடன் தகாத சகவாசமும் கொண்டிரு ந்த துரியோதனனை எப்போது பார்த்தாலும் பீமன் வம்புக்கு இழுத்துக் கொண் டே இருப்பான். அதனால் பீமனைக் கொன்று விடவேண்டும் என்று முடிவு செய்தான் துரியோதனன்.
ஒரு நாள் பாண்டவர்களிடம் சென்ற துரியோ தனன் நயமாகப் பேசி அவர்களை வனபோஜ னத்துக்கு அழைத்தான். துரியோதனனின் தீய எண்ணம் தெரியாத பாண்டவர்கள் வனபோஜ னத்துக்குச் சென்றனர்.
பீமன் அதிகமாக உண்பவன் என்பதால் அவனி டம் சென்ற துரியோதனன், ”பீமா, நீ அதிகம் சாப்பிடுபவன் என்பதால், உனக்குத் தனியாக விருந்து தயா ராக இருக்கிறது” என்று சொல்லி, அவனைத் தனியே அழைத்து சென்று விஷ மூலிகைகள் கலந்த உணவைக் கொடுத்து சாப்பிடச் செய்தான்.
துரியோதனனின் சூது அறியாத பீமனும் அந்த உணவு முழுவதையும் உண்டு விட்டான். விஷ மூலிகைகள் கலந்த உணவை உண்ட காரண த்தினால் பீமன் மயங்கி விழுந்து விட்டான்.
உடனே துரியோதனனும் அவனுடைய தம்பிக ளும் பீமனை காட்டுக் கொடிகளால் இறுக்கிப் பிடித்துக் கட்டி, விஷப் பாம்புகள் நிறைந்த ஒரு மடுவிற்குள் தள்ளிவிட்டனர். மடுவுக்குள் விழுந்த பீமனை அங்கிருந்த அத்தனை விஷப் பாம்புகளும் கடித்துவிடவே பீமன் மடிந்து போனான்.
துரியோதனனுடன் சென்ற தம்பி பீமன் நீண்ட நேரமாகியும் திரும்பாத காரணத்தால், துரியோதனனை அழைத்துக் கேட்டார் தர்மர். அவனோ, பீமன் வந்து சாப்பிட்டுவிட்டு உடனே திரும்பிவிட்டதாகக் கூறிவிட்டான். வருத்தத்து டன் வீடு திரும்பிய தர்மர் நடந்த விஷயத்தைத் தாய் குந்தியிடம் கூறினார்.
மேற்கொண்டு என்ன செய்வதென்று அவர்க ளுக்குப் புரிய வில்லை. ஆபத்பாந்தவனாகிய கண்ணனை நினைத்தனர். நினைத்ததும் நினைத்த மாத்தி ரத்தில் வந்துவிடும் கண்ண ன் அவர்களுக்கு முன் தோன்றினார். அவர்க ளின் வருத்தத்து கான காரணமும், பீமன் இருக்கும் இடமும் கண்ணனுக்குத் தெரிந்தது.
உடனே பாம்புப் பிடாரனாக மாறி, பீமன் தள்ள ப்பட்டிருந்த மடுவின் அருகில் சென்றார். தன் கையில் இருந்த மகுடியை இசைத்தார். கண்ணனின் குழலிசைக்கு இயற்கையே வசமாகும் என்றால், கண்ணனின் மகுடி இசை க்கு பாம்புகள் மயங்காதா என்ன?
மடுவிலிரு ந்த அத்தனை நாகங்களும் வெளி யேறி கரை க்கு வந்துவிட்டன. கண்ணனின் மகுடி இசை யில் தங்களை மறந்து லயித்திரு ந்தன. மடுவி ல் இருந்த அத்தனை பாம்புகளும் காணாததை கண்ட பாம்புகளின் அரசன் வாசுகி மடுவிலிரு ந்து வெளியே வந்து பார்த்தது.
மகுடி இசைப்பவன் சாட்சாத் கண்ணபிரானே என்பதைப் புரிந்துகொண்ட வாசுகி, கண்ண னிடம் மன்னிப்புக் கேட்டதுடன், பீமனின் உடலைத் தீண்டிய அத்தனை பாம்புகளையும் பார்த்து பீமனின் ரத்தத்திலுள்ள விஷத்தை உறிஞ்சி எடுக்கும்படிக் கட்டளையிட்டது.
அப்படியே பாம்புகள் பீமனின் ரத்தத்திலிருந்த விஷம் முழுவதையும் உறிஞ்சி எடுத்துவிட்டன. உறக்கத்திலிருந்து எழுபவனைப் போல் பீமன் எழுந்து கொண்டான். எதிரில் கண்ணன் இருப்பதைக் கண்டு வணங்கினான்.
கண்ணனை மறுபடியும் வணங்கிய வாசுகி, ”பீமனின் உடலில் இருந்த மூலிகைகளின் விஷத் தன்மையும், பாம்புகளின் விஷமும் சேர்ந்து அவனுடைய உடலை வஜ்ரம் போல் ஆக்கிவிட்டது. இனி எந்த விஷமும் அவனைப் பாதிக்காது” என்று வரமும் கொடுத்தது.
🌹சர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம்...
🌹ஸ்ரீ க்ருஷ்ணா உன் திருவடிகளே சரணம்...